Saturday, March 22, 2008

எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"...தொடர்கதை

என் பதிவில் இட்ட நாள்: 19.03.2008


இதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் "Smart sys" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும்.

செம காமெடிதான் பண்ணிட்டேன் !!
என்ன நடந்திச்சின்னா ....

1.sms அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிப் போச்சு . ஆனா, சொன்ன விஷயம் இதுவரை கண்டுகொள்ளப் படவேயில்லை.

2. அவர்கள் கொடுத்த reference எண்ணை அவர்கள் சொன்னது போல் அதே எண்ணுக்கு நேற்று இரவு அனுப்பினேன். Necessary action is in process என்ற அதே பல்லவி மறுபடி வந்தது.

3. அதோடு விட்டு விடலாமாவென நினைத்தேன்; இருந்தும் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் இப்படி ஒரு sms கொடுத்தேன்:

Automated messaging & answering system is working fine. Nothing more we can expect, I suppose. So sad. இப்படி அனுப்பிய sms-க்கு ன் பழைய பல்லவியான Your message has been received and necessary action is being initiated…...blah…blah என்று வந்தது. புதிதாக இதற்கொரு reference எண்ணும் வந்தது!

4. மறுபடி அந்த reference எண்ணை அனுப்பினேன். பழையபடி - Necessary action is in process என்ற அதே பல்லவி…

5. பொறுமை இழந்து அடுத்து கொடுத்த sms: I’m sorry. Intha vilaiyattukku nan varalai.

6. என்ன ஆச்சரியம். இதுவரை human touch ஏதுமில்லாமல் இருந்த மறுமுனையில் இருந்து உயிர்ப்புடன் ஒரு தொலைபேசி அழைப்பு. பேச ஆரம்பித்ததுமே யார் நீங்கள் என்ற விசாரணை. ஏன் இப்படி ஒரு sms என்ற கேள்வி. அவர் சொன்னதே சொன்னார். நான் அனுப்பிய கோரிக்கை மதுரை நகர் காவல்துறை தொடர்புடையதாம். இவர்களோ மதுரை புறநகர்க்காரர்களாம். என் கோரிக்கையை அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார். இந்த சேதியையாவது சொல்லாமல் வெறுமனே Automated message அனுப்புவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று நான் கூற, இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர்கூற 10-15 நிமிடங்கள் பேசினோம். இப்படி நீண்ட நேரம் பேசுவதற்குப் பதிலாக, reference எண் ஒருவரிடமிருந்து வரும்போது அவரனுப்பிய கோரிக்கையையும், அதற்கு எடுத்த நடவடிக்கை பற்றியும் தகவல் தெரிந்துகொண்டு இதுபோல் நேரடியாக ஓரிரு நிமிடம் பேசினால் கூட போதும்; அதுதான் பயன் என்று நான் சொன்னது அவருக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை.

நான் அனுப்பிய கடைசி sms அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது இந்த அளவாவது வேலை செய்தது எனக்குப் பிடித்தது! அதோடு வெறும் Automated message மட்டுமே என்றில்லாமல் சிலர் பொறுப்போடு வேலை செய்வது அறிந்ததால் கொஞ்சம் சந்தோஷமே!
பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...

சுபம் !


-----------------------------------

இதன் தொடர்பாகவோ என்னவோ இன்னொரு சேதி:
-----------------------------------

முதலமைச்சரின் தனிப்பிரிவு
தலைமைச் செயலகம், சென்னை-600 009
ஒப்புகை கடிதம்

அன்புடையீர்,
தாங்கள் மாண்புகிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் அளித்த மனு / முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்த மனு / சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அளித்த மனு முதலமைச்சரின் தனிப்பிரிவின் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது மனு தக்க நடவடிக்கையின் பொருட்டு உரிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
------------------
Petition No: F / 40178
23.2.2008
Grievance: SUGGESTIONS REG. TRAFFIC REGULATION IN THE AREA NERA MADURAI - REG
Forwarded to:
Distric Officers,
Commr. of Police (in dist)

Sd
For special Officer
------------------

இக்கடிதம் நேற்று 22, மார்ச் எனக்குக் கிடைக்கப் பெற்றது.

நான் நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஏதும் அனுப்பவில்லை. எந்தக் கடிதம் இங்கு அனுப்பப்பட்டதென்பதும் தெரியவில்லை. அனேகமாக, மத்திய அரசின் Dept of Grievances-க்கு ஜனவரியில் அனுப்பிய கடிதம் இங்க அனுப்பப்பட்டிருக்கலாமென நினைக்கிறேன்.

Glad wheels are moving...

எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"

"SMART SYS" என்றொரு முறையின் மூலம் பொது மக்கள் காவல்துறையிடம் தங்களது புகார், குறைகள் பற்றி கைத்தொலைபேசிகளின் குறுஞ்செய்தி வசதி மூலம் முறையிட வழி செய்துள்ளனர்.
இவ்வளவு வசதி கொடுத்தால் நாம் சும்மா இருக்கலாமா...?

சனிக்கிழமை மார்ச்,08, 2008 - The Hindu நாளிதழில் இக்குறுஞ்செய்தித் திட்டம் பற்றி வந்துள்ள செய்தியின் தொடுப்பு: http://www.hindu.com/2008/03/08/stories/2008030858180300.htm

இத்திட்டத்திற்கு நான் அன்றே அனுப்பிய என் முதல் குறுஞ்செய்தி:


High time police dpt took strong steps to instil SOME traffic discipline. Else with booming of traffic things will become unclontrollable.

Pray to refer a page of my blog:
http://dharumi.blogspot.com/2006/12/191.html


இத்திட்டத்திற்கு நான் அனுப்பிய என் இரண்டாம் குறுஞ்செய்தி:

I sent a mail to the portal of Public Grievances of Central Govt. on 17.09.'07 regarding the chaotic traffic in Samayanallur-Paravai-Madurai road and got a response saying that S.P. of Madurai has been asked to look into that.

(Please view: http://dharumi.blogspot.com/2007/12/245.html)

In case the metal barricades that are being put up in this road recently are the result of it, I request that they should be made visible in the night with florescent paint. For those in smaller vehicles these barricades are simply INVISIBLE due to very bright headlights of oncoming traffic.

WILL ANYONE ever keep such barricades of this sort on busy roads IF ONLY he would be held RESPONSIBLE for any possible mishaps?

RSVP