Sunday, February 24, 2008

ரயில்களில் கழிப்பறைகள் தொடர்பாக...

என் பதிவில் பதிந்த நாள்: 12/30/2007


மீண்டும் ஒரு வேண்டுகோள்


மத்திய அரசு குறை தீர்க்க அமைத்துள்ள இணைய தளத்தின் hit counter மிகவும் ஆச்சரியமான முறையில் வெகு வெகு வேகமாக கூடிக்கொண்டே போவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.(இந்த நிமிடம் எண்ணிக்கை சரியாக 6000) என் முந்திய பதிவு இடப்படுவற்கு முன் வெறும் 1300-களில் இருந்த எண்ணிக்கை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 2100-களில் உயர்ந்தது பார்த்து - காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக (?) - மகிழ்ந்து போனேன். அந்த எண்ணூத்தி சொச்சம் பேரில் 5% மக்கள் மட்டுமேகூட பதிவிட்டிருந்தாலும் 40 பேருடைய விண்ணப்பங்கள் ஒரே கருத்துக்காக போய்ச் சேர்ந்திருக்கலாமேவென எண்ணினேன். (நெனப்புத்தான்!!!)
எல்லோருமே ஒரே குறையைப் பற்றி எழுதுவதை விடவும் பல குறைகளை எழுதி அவைகளில் சிலவாவது குறைதீர்க்கப் பட்டால் நல்லதுதானே என்ற எண்ணத்தில் இன்னொரு வேண்டுகோளை உங்களிடம் வைக்கின்றேன்.

அடுத்த குறையாக நமது தொடர்வண்டிகளில் இருக்கும் கழிப்பறைகளின் நிலை உங்களுக்குத் தெரியும்தானே; அதைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தை இந்த இணையதளத்திற்கு அனுப்பியுள்ளேன். ( Registration No. DARPG/E/2007/08851; நகல் கீழே). என் முந்திய பதிவில் இந்த இணைய தளத்திற்கு என் வேண்டுகோளுக்கிணங்கி முதலில் விண்ணப்பம் அனுப்பிய முதல் 5 பேரை மட்டும் இந்த விண்ணப்பம் சார்ந்த கருத்துக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்ப வேண்டுகிறேன். அவர்கள்:

1. தென்றல்
2. வவ்வால்
3. மாசிலா
4. தெக்ஸ்
5. நாகை சிவா

இப்படி விண்ணப்பம் அனுப்புவதில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள மற்றோருக்கு என் வேண்டுகோள்:

நமக்கென்ன பிரச்சனைகளா இல்லை. அவைகளில் உங்கள் மனதில் தோன்றும் பிரச்சனைகளை நீங்கள் ஏன் பதியக் கூடாது? பலரும் பதிவீர்கள்; பதிவிடவேண்டுமென வேண்டுகிறேன்.

அப்படி நீங்கள் அனுப்பும் உங்கள் விண்ணப்பத்தின் நகல்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் இட்டால் நம் எல்லோரின் பார்வைக்கு அவைகள் வருவது நலமாயிருக்கும். விண்ணப்பங்களுக்கு வரும் பதில்களையும் (எல்லாமே ஒரு நம்பிக்கைதானே!) இங்கு மீண்டும் பின்னூட்டமாக இட்டால் நலமாயிருக்கும்.

என்னென்னமோ பண்ணியிருக்கோம்; இது பண்ண மாட்டோமா ...?


நான் இன்று அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்:

Recent media reports say that Indian Railways is one of the very few rail lines in the whole world not to have safe lavatories. What my teacher jokingly said half a century back – a man traveling from Tirunelveli to Delhi with an infected bowel would spread his ‘bug’ to the whole length of the country – still stands sadly true. And it is also a real shame to our growing nation.

IMMEDIATE AND TIME-BOUND STEPS SHOULD BE TAKEN AT THE EARLIEST TO INTRODUCE SAFE SANITARY SYSTEM IN OUR TRAINS. Mode of handling the waste should also be mechanical and safe.

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்

என் பதிவில் இட்ட நாள்: 12/19/2007


இதோ நம் கையில் ஓர் ஆயுதம் என்றொரு தலைப்பில் பதிவொன்று இட்டிருந்தேன். நம் குறைகளை மத்திய அரசின் துறை ஒன்றுக்கு (Dept. of Administrative Reforms & Public Grievances)அனுப்பினால் அதனை நிவர்த்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று தெரிந்து அத்துறைக்கு இரு குறைகளைப் பற்றித் தகவல் அனுப்பியிருந்தேன். இதுவரை ஏதும் பதில் இல்லாததால் 'சரி! அவ்வளவுதான்' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று ஒரு பதில் வந்துள்ளது.

THE WHEELS ARE REALLY TURNING

நான் வழக்கமாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை 'விபத்துப் பகுதி' என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அங்கு தாறுமாறாக விரையும் பேருந்துகளைக் கவனிக்கவோ மட்டுப் படுத்தவோ எவ்வித முயற்சியும் இல்லாமை பற்றியும் அதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் பற்றியும் எழுதியிருந்தேன். இதற்கு வந்த பதில் நம் அரசும், அரசு இயந்திரங்களும் 'உருண்டு கொண்டுதான்' இருக்கின்றன என்ற நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இன்று எனக்கு வந்த அந்த பதில்:

Reply for your e-mail dated 17.09.2007 about Samayanallur-Paravai-Madurai - Road - Reg.

Kindly refer your e-mail dated 17.09.2007 addressed to Govt. of India.

the Superintendent of Police, Madurai has been requested to instruct
the Highway Patrol Police officials to take immediate action against
drivers who are indulging rash driving in Samayanallur-Paravai-Madurai road.



இதில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், இன்றுவரை - 19.12.'07 - இத்தளத்திற்குச் சென்று (எட்டிப்) பார்த்தவர்களே வெறும் 1372 பேர் மட்டுமே என்பது கொஞ்சம் ஆச்சரியமாக (வேதனையாகவும் தான்) இருந்தது. இணைய பயனர்கள் மிகுந்து இருக்கும் நம் நாட்டில் இத்தகைய ஒரு நல்ல வசதியை - இணையத்தின் மூலமே நம் குறைகளைக் கூறும் எளிதான இந்த வசதியை - நம்மில் யாரும் பயன்படுத்தாதது ஏமாற்றமே.

என் இரண்டாவதாக முயற்சியாக, மனிதக் கழிவுகள் அகற்றும் வேளை அந்த வேலை செய்து கொண்டிருந்த மூன்று சுத்தித் தொழிலாளர்கள் சென்னையில் இறந்த ஒரு செய்தி பற்றிக் கூறி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலை மாற அது இயந்திரமாக்கப்பட வேண்டும்; அதற்குரிய முயற்சிகளை ஒவ்வொரு மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல் கடிதத்தைத் தொடர்ந்து மற்றொரு கடிதமும் ஏற்கெனவே அனுப்பியுள்ளேன். அதற்குப் பதிலும், பதிலைத் தொடர்ந்த காரியமாற்றலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

நான் பதிவனாக சேர்ந்த புதிதில் இந்த விஷயம் பற்றிய ஒரு நெடும் விவாதம் பதிவுலகில் நடந்தது. பலரும் இதைப் பற்றி எழுதினார்கள். அப்போதே இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படியென்றெல்லாம் பேசினோம். இதோ இப்போது நம் கண்முன் உள்ள பாதையில் எல்லோருமாக ஒரு படி முன்னெடுத்தால் என்ன?

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்:

சீரியஸ் பதிவு, சீரியல் பதிவு, கும்மிப் பதிவு, மொக்கப் பதிவு என்று வகைவகையாக பதிவுகளைப் போட்டுக்கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் ஒரு வேண்டுகோள். இயந்திரமாக்கப் படுதல் அவசியம் என் நீங்களும் நினைப்பின் ஏன் ஒரு மயில் இந்த முகவரிக்கு அனுப்பக் கூடாது?(http://darpg-grievance.nic.in)ஒருவேளை எழுத சோம்பேறித்தனப் பட்டால் உதவுவதற்காக நான் ஏற்கெனவே எழுதிய மயிலின் நகலை இங்கே தந்துள்ளேன் - வெட்டி ஒட்ட!

-----------------

It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It is a pround moment for every one of us.

BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?

A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.

Is it asking too much to request the governemnt to shell out some money for this and liberate the 'harijans' from this job thrusted on them for generations.

Saturday, February 9, 2008

இதோ நம் கைகளில் ஓர் ஆயுதம் ..

என் பதிவில் இட்ட நாள்: Sept 16, 2007



இது இந்தியாவுல தான் நம்புங்க! என்ற தலைப்பில் ஒரு பதிவிருக்க நம்பாமல் அப்பதிவுக்குச் சென்றேன்.


ஆச்சரியமாக இருக்கு. நான் பார்த்ததை இன்னும் பலருக்கு எடுத்துச் செல்ல என் பதிவில் அப்பதிவிற்கு ஒரு இணைப்பு கொடுக்கிறேன். வாசித்துப் பாருங்கள்; செய்தும் பார்போம்.


ஒரு பெரிய விஷயத்திற்கு எனது மிகச்சிறிய பதிவு ... என்னால் முடிந்தது.

அப்பதிவருக்கு என் நன்றி.